திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில், சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

காலை 11 மணி அளவில் பால்குடம் ஊர்வலம், அதைத் தொடர்ந்து ஆலயத்தில் அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அருட்ப்ரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாலை ஆறு மணி அளவில் அம்பாள் அன்ன வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ஆ. ரமேஷ், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, செட்டித்தெரு நிர்வாகிகள், செட்டித்தெருவாசிகள், ஸ்ரீ சீதளாதேவி இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் நகரவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் வலங்கைமான் பகுதியில் உள்ள ஐம்பெரும் சிவாலயங்களான அருணாச்சலேஸ்வரர், வைத்தீஸ்வரர், கைலாசநாதர், ஏகாம்பரேஸ்வரர், காசி விசுவநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதேபோன்று ஆலங்குடி குரு பகவான் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் சுந்தரமூர்த்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து, விநாயகர் வீதி உலா காட்சி நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *