திருவள்ளூர்
கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோயில் பதினோராம் ஆண்டு திருக்கல்யாண வைபோக விழா வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது கொடூர் ஊராட்சி இந்த ஊரா ட்சி உள்ள கிருஷ்ணாபுரம் பகுதி யில் புகழ்பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி திருக் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டு தோறும் திருக்கல்யாண வைபோக விழா வெகு விமர்சை யாக நடைப்பெற்று வருகின்றது. இதனையடுத்து திருக்கல்யாண வைபோக விழாவை யொட்டி பந்த கால் நடும் பணி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மகா ஸ்ரீ ராஜாதி ராஜ அயோத்தி சேனாதிபதி ஸ்ரீ தசரத சக்கரவர்த்தியின் ஜேஷ்ட குமாரர் ரகு குல திலகம் ஸ்வாமி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும் மஹா ஸ்ரீ ராஜாதி ராஜ மிதிலா சேனாதிபதி ஸ்ரீ ஜனக மஹாராஜ னுடைய புண்ய குமாரி சௌபா க்கியவதி ஸ்ரீஸ்தா தேவிக்கும் திருக்கல்யாண மஹோத்ஸவம் பதினோராம் ஆண்டாக நடைபெற் றது.
இத்திருக்கல்யாண உபயதாரர்கள் ஏ.குமார் புவனேஸ்வரி, பாலாஜி லல்லி, கணேஷ்குமார் சித்ரா, வி.சுகுமாரன் சரஸ்வதி, உள்ளிட்ட குடும்பத்தினர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிருஷ் ணாபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் ஏராள மான பக்தர்கள் பங்கேற்று திருக் கல்யாண வைபோக நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
முடிவில் பக்தர்களுக்கு ஸ்வாமி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.