பாபநாசம் அருகே மேட்டுத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ காளியம்மன் ஆலயம் மகா கும்பாபிஷேகம்…

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ காளியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று முடிவற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெற்றன அதனை தொடர்ந்து கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து மேல தாளமுடன் வேத மந்திரங்கள் மூலம் அருள்மிகு ஸ்ரீ செல்வ காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் சாமி ஆலயத்தின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக நிகழ்ச்சி கிராம மக்கள் ஏராளமான பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் விழாவின் ஏற்பாடுகளை மேட்டு தெரு விழா குழுவினர்கள் கிராமவாசிகள் , செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *