தூத்துக்குடியில் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி 7ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாட்டின் பேரில் நாளை அன்னதானம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 7ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

என்.பெரியசாமி சிறுவயது முதல் தி.மு.கழகத்தில் இணைந்து வட்ட பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர்.
பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம். தன்பாடு உப்பு சுமை மூடை தூக்கும் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 32 தொழிற்சங்கங்களுக்கு தலைவர் அதனை தொடர்ந்து 1986 – ல் தூத்துக்குடி மாவட்டம் தனியாக உதயமான நாள் முதல் தன் இறுதிக் காலம் வரை ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க செயலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர்.

1986 ல் தூத்துக்குடி நகரமன்ற தலைவர், 1989, 1996 ஆண்டுகளில் 2- முறை சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் துறைமுக சபை பொறுப்புக்குழு உறுப்பினர், என பதவி வகித்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு எண்ணற்ற நல்ல திட்டப் பணிகளை கொண்டு வந்தவர்.

முத்தமிழறிஞர் கலைஞரால் தன்னுடைய முரட்டு பக்தன் என்று பாராட்டப்பட்டவர். இன்றைய கழக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் அன்பை பெற்றவர்.

தூத்துக்குடி வளர்ச்சியின் நலனில் அக்கறையுடன் செயலாற்றி மறைந்த என்.பெரியசாமியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு தரப்பினர் தூத்துக்குடியில் அன்னாரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடி போல்பேட்டை கீதாஹோட்டல் வளாகத்தில் மாபெரும் அறுசுவை அன்னதானம் நடைபெறுகிறது. அதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மேயா் ஜெகன் பொியசாமி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *