கமுதி அருகே கே. பாப்பாங்குளம் அரசு பள்ளி ஆசிரியர் கண்ணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.பாப்பாங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கண்ணன்(51). இவர் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் கே. பாப்பாங்குளம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இடை மறித்து அறிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இது குறித்து கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றார். முதல்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.