தேமுதிக காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பில் 2.0 மக்கள் உரிமை மீட்பு
மாநாடு செய்தியாளர் சந்திப்பு.
காஞ்சி தெற்கு மாவட்டம் தேமுதிக சார்பில் கடலூரில் நடைபெறும் 2.0 மக்கள் உரிமை மீட்பு மாநாட்டுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் உத்திரமேரூர், மதுராந்தகம்,தொகுதியில் உள்ள தேமுதிக நிர்வாகிகள் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைப்படி காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜேந்திரன் தலைமையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்பது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை அனைத்து கட்சியும் திரும்பி பார்க்கும் அளவிற்கு மாநாடு இருக்கும் மேலும் இந்த மாநாடு எழுச்சி மிகு மாநாடாக இருக்கும் என காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் லட்சுமணன் மாவட்ட அவைத் தலைவர் வெங்கடேசன் தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.சிவகுமார், இ.என்.பெருமாள்,
ரமேஷ், கன்னியப்பன், பிரேம்குமார், ராமலிங்கம், கிருபாகரன், பொன்னுரங்கம், பன்னீர், அச்சிறுப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் ஜெ.அசாருதீன்,மதுராந்தகம் நகர கழக செயலாளர் சாந்தகுமார், நகர அவை தலைவர் கமல் பேரூராட்சி செயலாளர்கள் பழனிராஜ், பிரபு, ஐயப்பன்,உள்ளிட்ட மாவட்ட நகர பேரூர் ஒன்றிய நிர்வாகிகள் என
15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாநாட்டில் பங்கு பெற்றனர்.