கோவையில் ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் – அனுமதி கொடுத்த நில அளவைத் துறையில் பணியாற்றிய இருவர் கைது…

கோவையில் ஆள்மாறாட்டம் செய்து பட்டா மாறுதல் – அனுமதி கொடுத்த நில அளவைத் துறையில் பணியாற்றிய இருவர் கைது…


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தெற்கு வட்டம் வட்ட அலுவலகத்தில் நகர சார் ஆய்வாளராக நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பணிபுரிந்து வருபவர் அலுவலர் சுரேஷ்குமார்.

இவர் கடந்த ஜனவரி மாதம் தனது அலுவலகத்தில் உடன் பணி புரியும் முதுநிலை வரைவாளர் நில அளவை மற்றும் பதிவேடுகள் பட்டா மாறுதலுக்கான பயனாளர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை அவருடைய அனுமதியில்லாமல் எடுத்து அதனை அவர் பயன்படுத்துவது போல் பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றம் செய்ததாக தெரிகிறது.


பட்டா மாறுதலுக்கான அனுமதி வழங்கியும் அடுத்த கட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்ட பின்னர் பட்டா மாறுதல் செய்யப்பட்டு உள்ளது

என தெரிய வந்ததாகவும், மேற்படி அலுவலகத்தில் தங்களுடைய பயனாளர் ஐ.டி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை பயன்படுத்தி பட்டா மாறுதலுக்கான பரிந்துரை வழங்கிய நபர்களை சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டி புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அங்கு பணியாற்றிய சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த அருள்பிரதாப் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *