அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் டி.எம்.கே ஸ்போர்ட்ஸ் கிளப், ராகவீணா நினைவு குழு இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் தொடர் கபடி போட்டி நடைபெற்றது.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். போட்டியை தொடங்கி வைத்தார் சிறப்பாக விளையாடும் அணியினருக்கு ரொக்க பரிசுகளும் சான்றிதழ் மற்றும் கேடயங்களும் வழங்கப்பட்டது.

இதில் சுற்றுவட்டார விளையாட்டு வீரர்களும் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட வெளி மாவட்ட அணியினரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *