தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் ,கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து நடத்தும் கும்பகோணம் லதா ஜுவல்லரி ,லட்சுமி தங்க மாளிகை, ஹோட்டல் மயூரா., V L ஜுவல்லரி, ஆகியோர் குடும்பத்தார் நிதி உதவியுடன் நடைபெற்ற
இலவச கண் சிகிச்சை சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொது மக்களுக்கு கண்களை பரிசோதித்தனா். நகரப்புற கிராமப்புற பொது மக்கள் சேர்ந்த சேர்ந்த 647 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 353 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.

முகாமுக்கு நிதி உதவி அளித்து கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் சேவையாற்றிய அரிமாக்களுக்கும் லியோ பிள்ளைகளுக்கும் முகாமுக்கு நடத்த அனுமதி அளித்த ஸ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
குழுமத்திற்கும், நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என லயன் கண்ணன் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *