வலங்கைமானில் பேரூர் திமுக சார்பில் திராவிட பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நெடுஞ்சாலை துறை பயணியர் விடுதி அருகில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின் பேரில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆணைப்படி, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கே.கலைவாணன் பரிந்துரையோடு, வலங்கைமான் பேரூர் திமுக சார்பில் தமிழுர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களுக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியினை காலையில் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் போட்டியினை துவக்கி வைத்து, வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மாலையில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன் ஆகியோர் இணைந்து முதல் பரிசு ரூபாய் 5ஆயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூபாய் 2 ஆயிரம் பரிசு தொகையினை வழங்கி மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்வில் வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், ஒன்றிய பிரதிநிதி சிங்குதெரு எம்.ஆர்.ராஜேஷ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செல்வமணி உள்ளிட்ட வார்டு செயலாளர்கள், பேரூர் கட்சியின் நிர்வாகிகள்,சார்பு அணி நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *