தர்மபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று தர்மபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் நூலகர் சி சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் கூத்தப்பாடி மா. பழனி செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் நெ.த.அறிவுடைநம்பி வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். இந்தக் கூட்டத்தில்,

புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிப்பது,
எதிர்வரும் தர்மபுரி புத்தகத் திருவிழாவில் மாவட்ட படைப்பாளர்களின் நூல்களை வெளியிடுவது,
மாவட்ட படைப்பாளர்களின் நூல்கள் விற்பனை செய்ய அரங்கு ஏற்பாடு செய்வது,
சங்கத்திற்கு இணையதளம் தொடங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக பாவலர் கோ. மலர்வண்ணன் வரவேற்றார்.

முடிவில் கே.ஆர்.அப்பாவு நன்றி கூறினார். கூட்டத்தில் இரா.சிசுபாலன், தகடூர் மணிவண்ணன், முனி ராஜ் ஆசிரியர், நடேசன், கவிதா மோகன்தாஸ் உள்ளிட்ட படைப்பாளர்கள் திரளான கலந்து கொண்டனர்.‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *