திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே துவரங்குறிச்சி அடுத்த பில்லுப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகில் மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த கோழிகளை விழுங்கிய நிலையில் கிடந்துள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர் .தகவலின் பேரில் நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறிது நேர போராட்டத்திற்கு பின் மலைப்பாம்பினை உயிருடன் மீட்டனர் .

மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மலைப்பாம்பை அருகில் உள்ள வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *