திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை தடியன்குடிசைப் பகுதியில் சில தினங்களாக முகாமிட்டிருந்த காட்டுயானை.
பண்ணைக்காடு எதிரொலிபாறை வழியாக வாழைகிரி சென்றது. அவ்வழியே சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. தொடர்ந்து பூலத்துார் பகுதி விளை பொருட்களை சேதப்படுத்தியது. பெரும்பள்ளம் வனத்துறையினர் ஒற்றை யானை நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.