செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் NSWF தேசிய சமூக நல அமைப்பு மனித உரிமை பிரிவு சார்பில் 78 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா முன்னிட்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.


முன்னதாக இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் எம்.வேலு, மாவட்ட இணை
தலைவர் பாலசுப்பிரமணியன்,மாநில குழு செயலாளர் கே.வேலு, மாவட்ட ஒன்றிய செயலாளர் என்.வெங்கடகிருஷ்ணன் ஆகியோர்களுக்கு டாக்டர் பட்டம் விருதுகள்
அமைப்பின் தேசிய தலைவர் ஆர்.சிவனேசன் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் ஒன்றியம்
மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு
சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட தலைமையில் சார்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *