கடலூர் மாவட்டம் வடக்குபாளையம் தூய இதய மேல் நிலைபள்ளி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நான்கு வீதிகள் வழியாக புறப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது பிரச்சாரத்தினை பள்ளியின் தாளாளர் தந்தை திரு அகஸ்டின் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்
பள்ளி தலைமையாசிரியர்பொறுப்பு திரு தேவராஜன் உடற்கல்வி ஆசிரியர் திரு டேவிட்பெர்னான்டஸ் மற்றும் ஆசிரியர்கள் வினோத். கோபி நெல்சன். மற்றும் இருபால் ஆசிரியர்களும் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்புடன் அழைத்து சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்
6.7.8.9.ஆகிய வகுப்பை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் சோழதரம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் சாலை விழிப்புணர்வு பிரச்சாரம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
செய்தியாளர் திருநாவுக்கரசு.