பணி நிரந்தரம் எப்போது?
12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு:
சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து இருந்தது.
இரண்டு ஆண்டு முடியும் தருவாயில் இன்னும் பணி நிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிட வில்லை.
திமுக ஆட்சிக்கு வந்த போதும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ், சம்பள உயர்வு, மே மாதம் சம்பளம் இவற்றைகூட வழங்காமல் இருப்பதால் பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது:
10 ஆண்டு பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்ய அரசாணை உள்ளது.
ஆனால் பகுதிநேர ஆசிரியர்கள் 10 ஆண்டு பணி என்பதையும் கடந்து, 11வது ஆண்டில் இன்னும் பணிநிரந்தரம் செய்யப்படாமல், ரூ.10ஆயிரம் தொகுப்பூதியத்தோடு தவித்து வருகின்றோம்.
முதல்வர் திமுக 181வது வாக்குறுதிபடி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய ஆணையிட வேண்டும்.
முதல்வரிடம் பலமுறை கோரிக்கை கொடுத்துவிட்டோம்.
இந்த இரண்டு ஆண்டில் பொங்கல் போனஸ், சம்பள உயர்வு, மே மாதம் சம்பளம் ஆகியவற்றை கொடுக்காமல் மறுப்பது வேதனை தருகிறது.
அரசியல் கட்சிகள் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை அறிக்கை மூலமாக வலியுறுத்தி உள்ளார்கள்.
இது முன்பு திமுக 10 ஆண்டாக ஆதரித்து பேசிய கோரிக்கை தான்.
இனியும் தாமதம் செய்யாமல், மனிதாபிமானத்துடன் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203