பேரவைக்கு மாவட்ட தலைவர்
கே.ஜே.ஆர்.அப்துல் காதர் தலைமை வைத்தார்,
சிஐடியு மாவட்ட தலைவர் எம் கே.என்.அனிபா துவக்க உரையாற்றினார்,மாவட்ட செயலாளர் டி.முருகையன் புதிய நிர்வாகிகளை அறிவித்து நிறைவுரையாற்றினார்,
முன்னதாக அமைப்பின் மாவட்ட துணை செயலாளர்கள்
எஸ்.வைத்தியநாதன், கே.பி.ஜோதிபாசு ஆகியோர் உரையாற்றினார்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், ஆன்லைன் முறையில் அபராதம் போடப்படுவதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் கட்டுமான நல வாரியத்தில் உள்ளது போல விபத்து நிதியை 5 லட்சமாக உயர்த்தி தர வேண்டும், நலவாரிய சலுகைகளை அதிகப்படுத்தி காலதாமதம் இல்லாமல் தர வேண்டும் இன்சூரன்ஸ், எப்சி கட்டணத்தை குறைத்திட வேண்டும்,நலவாரிய பதிவை ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவருக்கும் நல வாரிய பதிவு செய்ய அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

பேரவை கூட்டத்தில் மாவட்ட தலைவராக கே.ஜே.ஆர்.அப்துல் காதர் செயலாளராக
எம்.கே.ஜெய்சங்கர் பொருளாளராக எஸ்.வெங்கடேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *