கோவையில் நடைபெற்ற சாம்பியன் வெசஸ் சாம்பியன்ஸ் மாநில அளவிலான கராத்தே போட்டி-தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவையில் பாரா அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்…

கோவையில் சாம்பியன் வெஸ் சாம்பியன் எனும் மாநில அளவிலான கராத்தே போட்டி சந்தே கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..

பாரா அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பாக நடந்த இந்த போட்டியில் திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், கோவை, வேலூர், ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி உள்பட மாநிலம் முழுவதிலும் வீரர்-வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

தேசிய அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் விதமாக நடைபெற்ற இதில் 3 முதல் 21 வயது பிரிவு மற்றும் உடல் எடை பிரிவிலான பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..
கட்டா மற்றும் குமித்தே என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறன்களை வெளிப்படுத்தனர்.

இதில் வெற்றி பெறும் மாணவர்கள், கோவா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழக அணிக்காக பங்குபெற உள்ளதாக,போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் பாரா அகாடமி மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் செந்தில் குமார் பரமேஸ்வரன் தெரிவித்தார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *