ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை மத்திய பாசிச பாஜக அரசு நடைமுறைப்படுத்த முற்பட்டு வருகிறது அது ஒருபோதும் நடைபெறாது எனவும் பாஜகவின் அந்தக் கொள்கை ஜனநாயகத்தை காட்டிலும் சர்வதிகாரத்தை காட்டுகிறது அதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கும்பகோணத்தில் திராவிடர் கழக தலைவர் கி வீரமணி பேட்டி….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது….

ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கை என்பது ஜனநாயகத்திற்கு புறமானது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர்கள் இந்த கொள்கையை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள் எனவும், அம்பேத்கர் இயற்றிய எந்த ஒரு அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியாது எனவும், பாசிச அரசு ஜனநாயகத்தை மதிக்காமல் ஆட்சி சர்வாதிகாரத்தை காட்டி வருகிறது எனவும் , இதை திராவிடர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது என அவர் பேசினார்..
நிகழ்ச்சியில் திராவிடர் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *