தஞ்சாவூர்: தேர்தல்களில், தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய அளவிலான விருது, மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.விருது பெற்ற மாவட்ட ஆட்சியருக்கு மானஸா அகாடமி சார்பாக நிறுவனர் தனலெட்சுமி இரமேஷ் ,செயலாளர்கள் இராணி சர்மிளா மற்றும் ஜெயப்ரியா நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.