பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா வண்ண பட்டாம்பூச்சிகள் போன்று நடனம் ஆடிய குழந்தைகள்..,..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கரப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா6 கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன், திமுக பேரூர் செயலாளர் துளசிஅய்யா, ஹாஜி ஜபருல்லாஹ்,ஜமாத் சபை தலைவர் முகமது நஜீப் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதில் மாணவ மாணவிகளின் வண்ணப்பட்டாம்
பூச்சிகளின் நடன அமைப்பும் சாகசம் வீழ்ச்சிகளும் செய்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்தனர்.

நிகழ்ச்சியில் முபாரக், சுலைமான் பாட்சா, முகமது ஆரிஃப் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆசிரியர்கள் ,மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *