தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி பகுதியில் மஞ்சளார் ஆற்றங்கரை ஓரம் இல்ல அமைந்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டுப்பட்ட அருள்மிகு மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி மகாசிவராத்திரி திருவிழா வருகின்ற பிப்ரவரி 26ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் மகா சிவராத்திரி விழா கொடி ஏற்றப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் தனராஜ் பாண்டியன், பரம்பரை அறங்காவலர் கனகராஜ் பாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் வேலுச்சாமி,திருக்கோவில் வருடாந்திர பூசாரி பொதுமக்கள், பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோவில் அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.