தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில்
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்
களுக்கான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
மதுரையில் மேல பொன்னகரம் பகுதியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , மதுரை மாநகராட்சி தூய்மை பணி யாளர்களுக்கு காலை உணவினை வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மாமன்ற உறுப்பினர் ஜெயராம், நகர் நல அலுவலர் அபிஷேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.