சென்னை தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறந்த சமூக சேவை புரிந்த உறுப்பினர்களை பாராட்டி நுகர்வோர் காவலர் விருது வழங்கும் விழா அண்ணா சாலையில் உள்ள எஸ் வி எஸ் கிளப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் இரா கற்பூரசுந்தர பாண்டியன் ஐஏஎஸ். திரைப்பட இயக்குனர் மங்கை அரிராஜன். ஓய்வு பெற்ற காவல் துறை துணை ஆணையர் கண்ணப்பன். டாக்டர் புண்ணியமூர்த்தி. டாக்டர் பால்ராசு. டாக்டர் சோபியா பாத்திமா. டாக்டர் விஜயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.