சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைத்திட வேண்டும்,

ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, உள்ளிட்ட விடுப்பு உரிமைகளை வழங்கிட வேண்டும், வீடு கட்டும் திட்டத்திற்கான தனியாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *