திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இளைஞர் சிலர் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்த நிலையில் தேவராஜர் இருசக்கர சக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்களை துரத்திச் சென்றுள்ளார்.

அப்போது தாராபுரம் பிரிவு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் கீழே விழுந்தனர் அவர்களை கட்டி வைத்த பொதுமக்கள் அடி வெளுத்து வாங்கினர்

இரு சக்கர வாகனத்தை திருடி சென்ற நபர் மதுரையைச் சேர்ந்த அரவிந்தராஜ் என்பதும் உடன் அவரது நண்பர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற போது விபத்தில் சிக்கி கீழே விழுந்தனர்.


ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் அரவிந்த்ராஜ் பல்லடம் காவல்துறையினரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர் மது போதையில் இருந்த அரவிந்தராஜை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தற்போது மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அரவிந்தராஜை அனுப்பி வைத்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிய சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *