தாராபுரம் செய்தியாளர் பிரபு.
செல்:9715328420
தாராபுரம் வட்டம், பொன்னிவாடி எலுகாம்வலசில் எழுந்து அருள்பாலிக்கும்.ஸ்ரீ அருள்மிகு செல்வ கணபதி, ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி.ஸ்ரீ கன்னிமார் சுவாமிகள் ஆகிய 5,ந்து தெய்வங்களுக்கு
ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கும்பாபிஷேகம்: 1000, கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து தெய்வங்களை வழிபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி கிராமம் எலுகாம்வலசில் எழுந்து அருள்பாலிக்கும்.ஸ்ரீ அருள்மிகு செல்வ கணபதி, ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ துர்க்கையம்மன், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி.ஸ்ரீ கன்னிமார் சுவாமிகள் ஆகிய 5,ந்து தெய்வங்களுக்குஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது.
இந்த விழாவானது
150,ஆண்டுகள் பழமையான வரலாற்று புகழ் பெற்ற திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் புனராவர்த்தன ஆலய மகா கும்பாபிஷேக விழா 40. ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி பூஜை ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியுடன்
காலயாக பூஜைகள் நடத்தப்பட்டு நாடி சந்தானம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து காசி,திருச்செந்தூர்,காவிரி, அமராவதி, திருமூர்த்தி மலை உட்பட பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அருள்பாலிக்கும்.ஸ்ரீ அருள்மிகு செல்வ கணபதி, ஸ்ரீ மஹா மாரியம்மன், ஸ்ரீ ஆகிய பரிபார தெய்வங்களுக்கு முதலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்துதுர்க்கையம்மன், ஸ்ரீ கருப்பண்ணசுவாமி.
ஸ்ரீ கன்னிமார் சுவாமிகள் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டது.
கோயில் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்ட மகா கும்பாபிஷேக தீர்த்தம் மோட்டார் மூலம் பொதுமக்கள் மேல் தெளிக்கப்பட்டது. இதில் கரையூர்,மூலனூர், தாராபுரம், கொளத்துப்பாளையம்,ஒட்டன்சத்திரம், சாலைகடை,ரங்கபாளையம்,பொன்னிவாடி
மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000, கணக்கான பக்தர்கள் திரளாக திரண்டு வந்து மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனர்.
அதன் பிறகு பரிவார தெய்வங்களுக்கு சந்தனம், பால், நெய், மஞ்சள், இளநீர், உள்ளிட்ட ஏழு வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேக ஆராதனையும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.பிறகு கோமாதா பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.