செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வனத்துறை அதிகாரிகளுக்கு கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைக்கிணங்க காஞ்சி தெற்கு மாவட்டம்
தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான கா.சுந்தர் ஆலோசனைப்படி பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி வெள்ளரிக்காய் கேழ்வரகு கூழ் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி 3-வது வார்டு கவுன்சிலர் பா.ரவிக்குமார் ஏற்பாட்டில் இரவு பகல் பாராமல் பணி புரியும் வனத்துறை அதிகாரிகளுக்கு கேழ்வரகு கூழ் வழங்கினார்.

அப்போது வனத்துறை அதிகாரிகள் வானவர் ஆர்.சுந்தர் இளநிலை உதவியாளர் ஜெயகாந்தன் வனக்காப்பாளர்கள் தாமோதரன் சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள்
உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *