பாபநாசம் செய்தியாளர் ஆர் .தீனதயாளன்

பாபநாசம் அருகே சாலையில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து….
கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசீது வயது -56 .
இவர் பண்டாரவாடையில் உள்ள தஞ்சை கும்பகோணம்- நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மதுரையில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற அரசு பேருந்து முதியவர் அப்துல் ரசீது மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவர் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாபநாசம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.