காரமடை எஸ்விஜிவி பள்ளியில் மழலை வகுப்பு மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா –
காரமடை அருகே செயல்பட்டு வரும் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா பள்ளி முதல்வர் சசிகலா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும் எல்.கே.ஜி மாணவிகள் சனாயா மின்ஹா,ஹிதாயா ஷிபா ஆகியோர் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளர் திருமதி மனோரஞ்சித மலர் கலந்து கொண்டு மாணர்வர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து மழலையர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மனோரஞ்சித மலர் மழலையருக்கு பட்டம் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி,நிர்வாக அறங்காவலர் லோகு முருகன்,செயலாளர் ராஜேந்திரன்,பொருளாளர் ரத்தினசாமி,அறங்காவலர்கள் ராஜேந்திரன்,வேலுசாமி,தாரகேஷ்வரி மற்றும் நிர்வாக அலுவலர் சிவசதீஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவி மகிழினி நன்றி கூறினார். ஆரம்பக் கல்வி பயிலும் இளம் மாணவர்களுக்கு நடந்த இந்த பட்டமளிப்பு விழா எதிர்காலத்தில் பல்வேறு உயர் கல்விகளைக் கற்று உயர்ந்த நிலையை அடைய உத்வேகம் அளிக்கும் என்று பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *