விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- பெருநாழி- சாயல்குடி- கடுகுசந்தை- மாரியூர்- வாலிநோக்கம் இருவழிச் சாலையினை நான்கு வழித்தடமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட க. விலக்கு பகுதியில் பரளச்சி மின்வாரியம் வரை முதற்கட்டமாக இந்த சாலையினை ரூ.36.40 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்படுத்துத்தும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சிதலைவர் வீ.ப.ஜெயசீலன், , அவர்களுடன் இணைந்து தமிழக நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்
இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் பொன்னுத்தம்பி, சந்தன பாண்டியன், மூக்கையா மற்றும் கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.