வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலய புஷ்ப பல்லக்கு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபாடைக்கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் 8000 பக்தர்களுக்கு அன்னதானம், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரலாறு பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் கடந்த 30- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் தலைசிறந்த புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ பாடைக் கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், ஆலயத்தின் முன்புறம் பக்தர்களுக்கு 29- ஆம் தேதி சனிக்கிழமை இரவு 2000 பேருக்கு மிளகுப் பொங்கல், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. 30- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3000 பேருக்கு புளி சாதம், தயிர் சாதம், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

அன்று இரவு 3 ஆயிரம் பேருக்கு மிளகுப் பொங்கல், தண்ணீர் பாட்டில் என இரண்டு தினங்களில் 8000 பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை ஸ்ரீ பாடைக் கட்டி மகா மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் தலைவர் எம்.எம்.சண்முகவேல், செயலாளர் பி.சாமிநாதன், சங்க ஆலோசகர் இரா. செல்வம் தலைமை பூசாரியார், பொருளாளர் வி.எஸ்.குமார், துணைத் தலைவர்கள் என். மாரிமுத்து, ப.பெத்த பெருமாள், கோ. சண்முகசுந்தரம் யாதவ், சங்கத் துணைச் செயலாளர்கள் Rtn ‌ க. குமரன், எம் சத்யா (எ) கலியபெருமாள், வி.ஏ.வி. சூரியமூர்த்தி, சங்க மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் வெங்கடேஷ் சம்பத் எம்பிபிஎஸ், சங்க விளம்பரம் மற்றும் ஊடகப்பிரிவு செயலாளர் க. அப்பு ( எ) ரத்தீஷ்பாபு மற்றும் நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *