மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீரனூர் கிராமத்தில் பழைமை வாய்ந்த அருள்மிகு செல்லியம்மன், மமாரியம்மன் மற்றும் அய்யனார் கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களில் பங்குனி உற்சவம் கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .

இந்நிலையில் உற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று நடைபெற்றது.சிறப்பு பூஜைகள் நடைபெற்று தேரில் செல்லியம்மன் எழுந்ருளினார்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் கிராமமக்கள் அலங்கரிக்கப்பட்ட தேரினை தலையில் சுமந்து கிராமத்தின் வீதிகள் வழியே ஊர் எல்லையான வயல் பகுதியை சுற்றி வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர்.கீரனூர் கிராமக்களின் நூதன வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *