செய்தியாளர் தந்தைபிரியன்

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை நாடகத் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா
புதுச்சேரி கலை பண்பாட்டுத் துறை சார்பில் 17 ந்தேதி முதல் 24ந்தேதி வரை 40 நாடக மன்றங்கள் பங்கு கொள்ளும் விழா நடைபெறுகின்றது தினமும் மாலை 5 மணிமுதல் 10 மணிவரை ஒவ்வொரு நாடக மன்றத்துக்கும் ஒரு மணிநேரம் வீதம் தினமும் நான்கு நாடகம் நடக்கிறது
தொடக்கவிழா முதல் நாளான இன்று அரியாங்குப்பம் சட்ட மன்ற உறுப்பினர் பாஸ்கர் என்கின்ற தட்சணாமூர்த்தி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் படத்துக்கு மலர் தூவி துவக்கிவைத்தார் உடன் துறை அதிகாரிகள் மாற்று அரசு கலைமாமணிகள் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்