புதுச்சேரி அரசு ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியைச் சேர்ந்த 51 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் 31 நபர்களுக்கு ரூ.13,ஆயிரம் வீதமும் 20 நபர்களுக்கு ரூ.18,ஆயிரம் விதமும் ஆக மொத்தம் ரூ. 7.63 லட்சம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ள அறிவிப்பாணைகளை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவைத் தலைவருமான செல்வம் தவளக்குப்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை நல அதிகாரி திருமதி மோகனா தொகுதி முக்கிய பிரமுகர்கள் சக்திபாலன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மாயகிருஷ்ணன் முன்னாள் கவுன்சிலர் ராஜா காமராஜ் அய்யாவு ரமேஷ் வீரபாலன் முத்துகிருஷ்ணன் கனகராஜ் வாழுமுனி பச்சையப்பன் கருணாகரன் கோபு நாகமுத்து பிரபாகரன் சிவகுமார் ரமேஷ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்