தீ தொண்டு நாளை முன்னிட்டு பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.
திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாளையொட்டி தீயணைப்பின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர்களின் நினைவு சின்னத்தில் மாவட்ட அலுவலர் விவேகானந்தன் உதவி மாவட்ட அலுவலர்கள் மயில்ராஜ் சிவக்குமார் நிலைய அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்த அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.