வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேகம் வருடாந்திர பூர்த்தி விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேகம் வருடாந்திர பூர்த்தி விழாவையொட்டி காலை 8-மணிக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை பாடகச்சேரி ஶ்ரீ- ல-ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் கிராம அன்னதான அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.