செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி வில்லியனூர் கொம் யூன் திருக்காஞ்சி அருள்மிகு ஶ்ரீ கெங்கவராக நதீ ஈஸ்வரர் ஆலயத்தில்மஹா கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றதது
இதற்காக இரண்டு நாட்களாக யாகசாலையில் மந்திரங்கள் இரவும் பகலாக நடைபெற்று வந்தது இதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் வாத்தியார்கள் மந்திரங்கள் சொல்லியவண்ணம் கலசங்களை கொண்டு வந்து புனித நீரை கோபுர உச்சியில் கலசங்கள் மேலே ஊட்டினார்கள் இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்காஞ்சி விஸ்வநாதரை வணங்கினர்
இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே உள்ள கலசங்களின் மேல் புனித நீரை குறித்த நேரத்தில் அனைத்து கலசத்திலும் ஒரேநேரத்தில் மேல் ஊற்றினார்கள் இதில் அமைச்சர் தேனி ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கோயில் நிர்வாகி ஊர் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே மோர் அன்னதானமும் வழங்கப்பட்டது