திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் கடைவீதியில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆனது திமுக சார்பில் அனைத்து ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.

அதன்படி வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆவூர் கடைவீதியில் பொதுக்கூட்டமானது கட்சியின் மாவட்ட செயலாளரும், எம் எல் ஏ வுமான பூண்டி கே.கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வி.பிரிதிவிராஜன், வலங்கைமான் பேரூர் செயலாளர் பா. சிவநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் தலைமை கழக பேச்சாளர், ‌தலைமை செயற்குழு உறுப்பினர் வே.விக்ரமன், கழக இளம் பேச்சாளர் செல்வி இரா.கனிமொழி, நன்னிலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெக. வீரபாண்டியன் முன்னாள் எம் எல் ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுபேசினார்கள் .

கூட்டத்தில் மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் க. பரமசிவம், ஒன்றிய பொருளாளர் இரா.பாஸ்கர், ஒன்றிய துணை செயலாளர்கள் பா.சுப்பிரமணியன், இரா.பரமசிவம், மீரா. சாமிநாதன், மாவட்ட பிரதிநிதிகள் சி.எஸ். பாலசுப்பிரமணியன், பா. கல்யாணசுந்தரம், க. சேகர், நன்னிலம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அ. அன்பு பிரபு, மாவட்ட பிரதிநிதி க. தனித்தமிழ் மாறன் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் சோம. மாணிக்கவாசகம், வி.சி. இராஜேந்திரன், பி.வசந்தி, வி.ரமேஷ், எல். புருஷோத்தமன், எஸ். ரவிச்சந்திரன், வாக்குச்சாவடி மைய ஒருங்கிணைப்பாளர்கள் பி.வீரபாண்டியன், வி.கே. ஜெயக்குமார், கோ.திருநாவுக்கரசு, வை. தாமரைச்செல்வன், ப. நீலகண்டன், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், பேரூர் நிர்வாகிகள் வி.சதானந்தம், சி.எம். கதிரவன், கே.செல்வமணி, க.செல்வம், எஸ். ஆர். ராஜேஷ், ரம்ஜான் பீவி சிவராஜ், யூ.ஆனந்த்குமார், புகழ்.மதுசோழன், எஸ்.ஜி.எஸ். கணேஷ் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஆவூர் கிளை கழக செயலாளர் ஆர். கோவிந்தராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *