கோயம்புத்தூர்:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக அரசியல் களத்தின் தூய்மையான அடையாளமுமான தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு கோயம்புத்தூர் சமூக ஆர்வலர் ஜேம்ஸ் டி நெல்சன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
”தமிழக அரசியலில் நேர்மை, எளிமை மற்றும் பொதுநலத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த ஐயா தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொதுவாழ்வில் தூய்மையை விரும்புபவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார்.
விவசாயிகளின் உரிமைக்காகவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் அவர் முன்னெடுத்த போராட்டங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. குறிப்பாக, ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக அவர் நடத்திய சட்டப் போராட்டங்கள் இன்றும் சமூக ஆர்வலர்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாகும். தனது வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும் சமரசமின்றிப் போராடிய ஒரு மகத்தான தலைவரைத் தமிழகம் இன்று இழந்து நிற்கிறது.
தன்னலமற்ற அவரது சேவைக்கும், அறம் சார்ந்த அரசியலுக்கும் எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”இவ்வாறு அந்த அறிக்கையில் ஜேம்ஸ் டி நெல்சன் குறிப்பிட்டுள்ளா