அரியலூரில் பணி ஓய்வு பாராட்டு விழா அரியலூர் பொது சுகாதார துறையில் சுகாதார மேற்பார்வையாளராக 37 ஆண்டுகள் பணிபுரிந்து பணிவு ஓய்வு பெறும் ஆர் ஸ்மித்சைமன் ஓய்வு பெறுவதை ஒட்டி அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
அரியலூர் இந்திய மருத்துவக் கழக அரங்கத்தில் நடந்த விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தெய்வஇளையராசன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா பாலு, முன்னாள் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேந்திரன், கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா, டாக்டர் கண்மணி, டாக்டர் பிரவீன், கோல்டன் மருத்துவமனை அரிமா பொன்மணி, சுகாதார மேற்பார்வையாளர் அருள்பிரியன், சக்திவேல் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு பணி ஓய்வு பெறும் ஆர் ஸ்மித்சைமன் அவர்களுக்கு பொன்னாடைகள் நினைவு பரிசுகள் சந்தன மாலைகள் அணிவித்து வாழ்த்து கூறினார்கள்