துறையூர் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள்

துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் போட்டியிட்டு வழக்கறிஞர் கார்த்திகேயன் சங்க தலைவராகவும்,முகமது ரபீக் சங்க செயலாளராகவும், நரேஷ் குமார் சங்கப் பொருளாளராகவும் வெற்றி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து துணைத் தலைவர் ,துணைச் செயலாளர், துணை பொருளாளர் தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கு சக வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்கள் மற்றும் பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *