நன்னிலம்., பிப்.27

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு தலைகுனியாது பிரச்சாரத்தில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளரும் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பேசியதாவது…

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் உறுதி கூறுகிறோம் எந்த காலத்திலும் பாஜக உடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என தெரிவித்த நிலையில் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் எம்பி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என அதிமுக பாஜக கூட்டணி அமைத்தது.

ஆனால் தமிழகத்தின் தாய்மார்கள் ஒருவர் கூட அவர்களை நம்பவில்லை இதனால் ஒரு சீட்டு கூட ஜெயிக்கவில்லை. நாற்பதிலும் 40 தொகுதிகளில் தலைவர் தளபதி ஸ்டாலின் தலைமையில் ஜெயித்துள்ளோம் முதல் நாள் ரெய்டு நடத்தினார்கள் . மறுநாள் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்தனர். அப்போது கூட்டணி வைக்க மாட்டோம் என சொன்னது குறித்து அது வேற வாய் என தெரிவித்தார்.

தற்போது மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி துணிந்து உள்ளார் டிடிவி தினகரனும் துரோகம் செய்தார் தற்போது எடப்பாடி பழனிச்சாமி டிடிவி தினகரன் இருவரும் ஒரே மேடையில் கட்டிப்பிடித்துக் கொண்டு உள்ளனர்.

சசிகலாவை மட்டும் சேர்த்துக் கொள்ளவில்லை . அந்த அம்மா வரவே மாட்டேன் என தெரிவித்துள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்திகளார்களை சசிகலா சந்தித்தபோது எடப்பாடி பழனிச்சாமி பெயரை கூட சொல்ல மாட்டேன் என தெரிவித்தார்.

அப்படி என்றால் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு வெறுப்பு வருகிறது என்றால் அந்த அளவிற்கு ஈனத்தனமானவன் யார் என்றால் எடப்பாடி பழனிச்சாமி ..

தற்போது ஏன் பாஜக பின்பக்கமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் ஏனென்றால் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அந்த இனம் பேசும் மொழியை அழிக்க வேண்டும்.

துரோகத்தை செய்யும் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமா? நம்மை சரியான பாதையில் கொண்டு செல்லும் மு க ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா? ஒருவிரல் போதும் இன்னும் 50 நாட்களில் உதயசூரியன் சின்னத்தில் விரலை வையுங்கள் பீப் என்ற சத்தம் ஒலிக்கும் அது மோடிக்கு ஒரு கொட்டு அமித்ஷாவிற்கும் ஒரு கொட்டு துரோகி எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஒரு கொட்டு என பேசினார். முன்னதாக நன்னிலம் தனியார் திருமண அரங்கில் நன்னிலம் தொகுதி முக்கிய நிர்வாகிகள் சந்திப்பும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், குடவாசல் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ஜோதிராமன், நன்னிலம் ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செல்வராஜ் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *