தாராபுரத்தில் மர்ம வெடிச்சத்தம் மூன்று முறை அதிபயங்கர சத்தம் – 40 கிலோமீட்டர் தொலைவிலும் உணர்ந்த பொதுமக்கள் தெறிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று (ஜூன் 30, திங்கட்கிழமை) மதியம் 12 மணி 26 நிமிடத்திற்கு துல்லியமாக, மூன்று முறை இடைவிடாது மிகுந்த வெடிச்சத்தம் (blasting sound) கேட்கப்பட்டதாகவும், அது தாராபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல கிராமங்கள் வரை உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திடீர் சத்தங்கள், பெரும் புயல் தாக்கம் அல்லது பூகம்பம் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பொதுமக்கள் திடுக்கிட்டு அச்சத்தில் வீடுகளிலிருந்து வெளியே ஓடி வந்தனர். பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் கடைகளிலும் பரபரப்பு நிலவியது.

எங்கிருந்து வந்தது இந்த சத்தம்?
இது தொடர்பாக அதிகாரபூர்வமாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் இந்த சம்பவத்தை தகவலறிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது பாதுகாப்பு துறையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெடிக்கையை (test explosion) தாண்டி, தாராபுரத்திற்கு அருகிலுள்ள மலைப்பகுதிகளில் சட்டவிரோத சுரங்க வேலைகளில் பயன்படுத்தப்படும் வெடிகுண்டுகளின் சத்தமா என்பதும் பலரது சந்தேகமாக உள்ளது.

“இந்த வெடிச்சத்தம் எங்கிருந்து வந்தது? இது இயற்கை சத்தமா அல்லது மனிதர் ஏற்படுத்தியது என்றேனும் தெளிவாக அதிகாரிகள் விளக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயந்த மக்கள் மனத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், அதிகாரிகள் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

“இது சுமாராக ராணுவ விமானம் வேகமாக பறக்கும் போது கேட்கும் சத்தம் போல இருந்தது. ஆனால் மூன்று முறை அதேபோல் சத்தம் வந்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வீட்டும் சிலசமயம் அதிர்ந்தது போல இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *