திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் ஆலோசனைப் படி, சந்திரசேகரபுரம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட வடக்கு பட்டம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. சந்திரசேகரபுரம் கால்நடை உதவி மருத்துவர் சக்திவேல், மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் சங்கவி, செளந்தர்யா, கலையரசி மற்றும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மரு. பிரியதர்ஷினி உள்ளிட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் குழு, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி, சினை ஊசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை மற்றும் நோய் சிகிச்சை அளித்தனர். கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் செந்தில், மாரியப்பன், இந்திரா ஆகியோர் சிகிச்சை அளிக்க உதவி புரிந்தனர். 200 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.