திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரி மகான் ஶ்ரீ-ல- ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் அருள் புரிந்த தவபீடத்தில் மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இன்று ஆடி மாத அமாவாசை பூஜையை முன்னிட்டு பகல் 12- மணிக்கு தொடங்கி அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அறுசுவையுடன் கூடிய அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாடகச்சேரி அன்னதான அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *