துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (ஜூலை-29) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.

முகாமை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இம்முகாமில் வெங்கடாசலபுரம்,ஒக்கரை ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா, ரேசன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.இதில் வருவாய்த்துறை,மின்சார துறை,காவல் துறை,வட்ட வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவ துறை, கூட்டுறவு துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, தகவல் தொழில்நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட 15 துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

முகாமில் வட்டாட்சியர் மோகன்,சமூக நலத்துறை தனி வட்டாட்சியர் சத்ய நாராயணன்,வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி,ஒன்றிய செயலாளர்கள் முத்துசெல்வன் ,ந.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மண்டல துணை வட்டாட்சியர், பிரபாகரன்,வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள்,ஊராட்சி செயலர்கள் பிரகாஷ்,சீரங்கன், வெங்கடாசலபுரம் கிளைச் செயலாளர் தனபால், வரதராஜ், கொப்பம்பட்டி முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *