தூத்துக்குடியில் 100 ஆட்டோ ஓட்டுநா்களுக்கு முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் சீருடை வழங்கினாா்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட பல்ேவறு பகுதியை சாா்ந்தவர்கள் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியனிடம் சீருடைகள் வழங்க வேண்டும் என்று கோாிக்கை வைத்திருந்தனா்.

இதனையடுத்து பழைய பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநா்கள் 100 பேருக்கு டூவிபுரத்திலுள்ள அலுவலகத்தில் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் சீருடைகளை வழங்கி பேசுகையில் எல்லா பகுதி மக்களிடமும் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் திட்டங்களையும் எடுத்துக்கூறுங்கள் என்றும் தொழிலாளா்களுக்கு உறுதுணையாக இருப்பது அதிமுக மட்டும் தான் அதிகாரத்திற்கு வந்த பிறகு இன்னும் கூடுதலாக பல நன்மைகளை செய்து கொடுக்க நாங்கள் காத்திருக்கிறோம். அதற்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில் மகளிர் அணி துணை அமைப்பாளர் சண்முகத்தாய், வட்டப்பிரதிநிதி ஐயப்பன், சங்கா், கனிராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *