திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அருள்மிகு ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி ஆலயத்தில் வருகின்ற செப்டம்பர் 4- ந்தேதி வியாழக்கிழமை காலை 9- மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து நேற்று (02-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், ப்ரசன்னாபிஷேகம், மிருத்சங்ரஹனம், கஜபூசை, குடமுருட்டி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. மாலை 5- மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, அங்குராரர்பனம், ரக்ஷாபந்தனனம், கும்பாலங்காரம், கலாகர்ஷனம், யாகசாலை ப்ரவேசம் முதல் கால யாக பூஜைகள் அக்நிகார்யம், அக்னிவிபஜனம், விசேஷ த்ரன்ய ஹோமங்கள், மஹா பூர்ணாஹுதி தீபாராதனை காலம் -1 நடைபெற்றது.

பூஜைகளை சர்வசாதகம் சிவகாகம் ப்ரவீன சிவாகமரத்தினககாரம் பட்டீஸ்வரம் சிவ ஸ்ரீ ஈசான ஆர்.ஜயப்ப சிவாச்சாரியார், ஆலய போதகர் சிவாகம கலாநிதி அலங்கார பூஷணம் சிவ ஸ்ரீ அகோர சிவ சந்திரசேகரபுரம் கே. எஸ்.வீரமணி சிவாச்சாரியார், உபசாதகம் சிவாகம சூடாமணி உடையாளூர் ஜி. சுவாமிநாத சிவம், ஆலய அர்ச்சகர் சிவாகம பாஸ்கரா சந்திரசேகரபுரம் வி. சேகர் சிவம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்வில் குடமுழுக்கு விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ டி. ஸ்ரீராம் அய்யர், ஸ்ரீ என். கோபாலன் அய்யர், முன்னாள் அறங்காவலர் ஸ்ரீ ஆர். சந்திர மெளளி அய்யர் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *