தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சங்கிலிவாடியில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா கடந்த 3 ஆம் தேதி அதிகாலை மங்கள விநாயகர் பூஜை மற்றும் கொடியேற்றுத்துடன் நடந்தது அதனை தொடர்ந்து கங்கணம் கட்டுதல் முளைப்பாரி எடுத்தல் மற்றும் மஹா கணபதி ஹோமம் நவசக்திஹோமம் கோபூஜை தீபாரதனை உள்ளிட்டவைகள் நடைபெற்றன அதனை தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது அதனை தொடர்ந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரபத்திரன் தலைமையில் ஸ்ரீமாரியம்மன் கோயில் மீது புனித நீர்தெளித்து மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது
அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது பின்னர் அங்குள்ள பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கினர் ,
அதனைத் தொடர்ந்து விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.இதில் முன்னாள் பொறுப்பாளர்கள் ராஜா ,ராஜீ ,கணேசன் நிர்வாகிகள்,கரியபெருமாள் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவில் பங்கேற்ற முக்கியஸ்தர்களுக்கு சிறப்பு செய்து விழாவை சிறப்பித்தனர்.